நான் கைப்பட வரைந்த
ப்ராஸ்டேட் சுரப்பி குறித்த புகைப்படத்தை
ஏஐ ஜெமினியிடம் வழங்கி
முப்பரிமாணம் கொண்ட
உண்மைத் தன்மைக்கு நெருக்கமான
படமாக மாற்றித் தருமாறு கேட்டுக் கொண்டேன்.
தனது திறனை உபயோகித்து
சிறப்பான புகைப்படத்தைத் தந்தது.
தமிழை மட்டும் பண்டைய கால தமிழி போல எழுதியது.
நான் அதை மட்டும் சரிசெய்து பாகங்களைக் குறித்து எழுதியிருக்கிறேன்
இக்காலத்தில்
செயற்கை நுண்ணறிவை நாம் திறனுடன் உபயோகிக்கக் கற்றுக் கொண்டால்
நமது நேரத்தை மிச்சப்படுத்தி
நமது ஆக்கங்களுக்கு சற்று மெருகேற்றும்
என்று நம்புகிறேன்.
எனினும், நமது கற்பனை வளத்தையும்
திறனையும் பாதிக்காத வண்ணம் செயற்கை நுண்ணறிவை நாம் உபயோகிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்வது காலத்தின் கட்டாயம் என்பது புரிகிறது.
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
0 Comments